• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவில் கொழும்பு- வாரணாசி இடையே விமான சேவை-மோடி

May 12, 2017 தண்டோரா குழு

புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்ப்பதற்காக இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இலங்கை புறப்பட்டு சென்றார்.

இலங்கையில் கொழும்பு பண்டார நாயக ஹாலில் சர்வதேச புத்தபூர்ணிமா கொண்டாட்டம் (வெசாக் தின கொண்டாட்டம்) நடைபெற்றது.இதில் தலைமை விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார்.

இவ்விழாவில் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது,

புத்தரின் புனித நிலமான இலங்கை தலைநகர் கொழும்பு- வாரணாசி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்தார். விரைவில் ஏர் இந்தியா விமானம் சார்பில் வாரணாசியில் இருந்து கொழும்புவிற்கு விமானச் சேவை செயல்படுத்தப்படும் என்றும், அந்த சேவை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என்றார். இது இலங்கையின் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

இதனைத்தொடர்ந்து பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே புத்த பூர்ணிமா விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு அவர் நன்றி கூறினார்.

மேலும் படிக்க