• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

October 4, 2017 தண்டோரா குழு

விருதுநகரில் தமிழக அரசின் அவசரகால 108 சேவை அவசரகால மேலாண்மை ஆய்வு கழகத்தின் ஆம்புலன்சில் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்
தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் அவசரகால 108 சேவை அவசரகால மேலாண்மை ஆய்வு கழகத்தின் ஆம்புலன்சில் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது.ஓட்டுனர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், வயது வரம்பு 24 முதல் 35 வரை இருக்கவேண்டும்.மேலும்,இலகுரக வாகனம் ஓட்டுனர் உரிமம் பெற்று 3 ஆண்டு முடிந்து, பேட்ஜ் உரிமம் பெற்று ஒரு வருடம் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் டி.எம்.எல்டி, டி பார்ம் அல்லது வாழ்க்கை அறிவியல் பட்டதாரிகள் பி. எஸ்சி. விலங்கியல், தாவரவியல்,உயிர்வேதியல், நுண்ணுயிரியல் 12ஆம் வகுப்பிற்கு பிறகு ஓராண்டு அரசு கல்லூரியில் இ.எம்.டி.டெக்னிசியன் (எலும்பியல், சுவாசமண்டல அறுவைசிகிச்சை அரங்க உதவியாளர்) சான்று பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பு 19 முதல் 30 வரை தகுதி உள்ளவர்கள் விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் 06.10.2017 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் தேர்வில் பங்குகொள்ளலாம்.

மேலும் படிக்க