• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விருதுநகர் மாவட்டத்தில் கல்வி உதவி தொகை பெற காலக்கெடு நீட்டிப்பு

October 4, 2017 தண்டோரா குழு

தமிழ்நாடு விருதுநகர் மாவட்டத்தில் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள கிறித்துவர்,இஸ்லாமியர்,சீக்கியர்,புத்த மதத்தினர்,பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு ஆன்லைனில் கல்வி உதவி தொகை பெற புதிதாக விண்ணபிக்க மற்றும் புதுப்பிக்கவும் காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

2017-18 கல்வியாண்டில் அரசு உதவி பெறும் மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகையும், 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர்/ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) படிப்பவர்களுக்கும் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் , மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி பயில்வர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற இனையதளம் மூலமாக புதுப்பிக்கவும்,புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் 30.10.2017 வரை விண்ணப்பிக்கலாம் என்றிருந்த நிலையில் 31.10.2017 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க