• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விமான ஆம்புலன்ஸ் பைலட் வேலையை கைவிடும் இளவரசர் வில்லியம்ஸ்

July 27, 2017 தண்டோரா குழு

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் முழுநேர அரச கடமைகளை செய்ய வேண்டி, அவர் செய்து வரும் விமான ஆம்புலன்ஸ் பைலட் வேலையை கைவிட உள்ளார்.

இங்கிலாந்தின் அரசி இரண்டாம் எலிசபெத் , கடந்த வருடம் தனது 9௦வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார்.இந்நிலையில் தனக்கு வயதாகி விட்டதால், அனைத்து அரச பணிகளை தன்னால் செய்ய இயலாது என்று உணர்ந்து, அரச பணிகளின் பாதி பொறுப்பை தனது மகன் இளவரசர் சார்லஸுக்கு தந்துள்ளார்.

இதனையடுத்து இளவரசர் வில்லியம்ஸ், ராணி எலிசபெத்தால் செய்ய முடியாத பணிகளை தான் தொடர போவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.அதன்படி, இன்று விமான ஆம்புலன்ஸ் பைலட்டாக தனது கடைசி நாள் பணியை செய்ய உள்ளார்.

மேலும் அவர் கடந்த 2௦௦6ம் ஆண்டு முதல் 2௦13ம் ஆண்டு வரை பிரிட்டன் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு , கேம்பிரிட்ஜ் விமான நிலையத்தில் விமான ஆம்புலன்ஸ் பைலட்டாக பணி செய்து வந்தரர்.

தற்போது, இளவரசர் வில்லியம்ஸ் தந்து மனைவி கேட் மற்றும் அவருடைய குழந்தைகள் இளவரசர் ஜார்ஜ் மற்றும் மகள் சார்லெட் உடன், ராணி எலிசபெத்துக்கு சொந்தமான சந்திரிங்காம் எஸ்டேட்டில் உள்ள அன்மர் ஹாலில் வசித்து வருகின்றார். ஆனால் அரசு பணிகளில் மேற்கொள்வதற்காக, தனது குடும்பத்துடன் லண்டன் நகரிலுள்ள கென்சிங்டன் அரண்மனையில் குடியேறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க