September 25, 2019 தண்டோரா குழு
மத்திய அரசு இந்திய விமான நகர் ஆனைகுளம் உங்களுக்கு சொந்தமான விமான நிலையங்களை தனியார் மயமாக்கி வருகின்றன. அகமதாபாத் லக்னோ ஜெய்ப்பூர் கௌஹாத்தி மங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு கொடுத்து விட்டது. தற்போது இதன் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது மேலும் அமிர்தசரஸ் புவனேஸ்வரம் கோயம்புத்தூர் இந்தூர் கோழிக்கோடு பாட்னா ராய்ப்பூர் ராஞ்சி திருச்சி மற்றும் வாரணாசி ஆகிய 10 விமான நிலையங்களை தனியார்மயம் ஆக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போது மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் கடந்த சில மாதங்களாகவே போராட்டங்களிலும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை விமான நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் விமான நிலையம் முன்பு உள்ள கொடிக் கம்பத்தின் கீழ் கூடாரம் அமைத்து விமான நிலைய வளாகத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று கொடிக் கம்பத்தின் கீழ் ஆர்ப்பாட்டம் நடத்தி போராட்டத்தை துவக்கியுள்ளனர் இந்தப் போராட்டமானது தொடர்ந்து 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது போராட்டத்தை ஒட்டி தொடர்ந்து மூன்று நாட்களும் எந்த விதமான பணிகளையும் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,
மத்திய அரசிற்கு லாபம் தரும் இந்தத் துறையை தனியார் வசம் ஒப்படைக்கும் பணியை உடனடியாக மத்திய அரசு நிறுத்த வேண்டும் இல்லை என்றால் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் விமான சேவையை முற்றிலும் முடங்கச் செய்யும் அளவிற்கு எங்களது போராட்டம் தீவிரமாக நடைபெறும் என்றனர்.