• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்த பெண்

October 27, 2017 தண்டோரா குழு

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் லண்டனில் இருந்து கிரீஸ் நாட்டிற்கு விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்துள்ளார்.

கரோன் கிரீவ்(57)என்ற எழுத்தாளர் தனது விடுமுறை நாட்களை கிரேஸ் நாட்டின் கிரேட் தீவில் செலவு செய்ய விரும்பினர்.இதனையடுத்து 4ஜெட்2 விமானத்தில் பயணம் செய்ய முடிவு செய்து, அதற்காக 46 பவுண்டு பணம் செலுத்தி, பயண சீட்டு வாங்கினார்.

இந்நிலையில் பயணம் செய்யும் நாளன்று கிளாஸ்கோ விமானநிலையத்திற்கு வந்தார். அப்போது, அவர் பயணம் செய்யும் விமானத்தில், அவரோடு 3 பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக, அவரோடு கூட பயணம் செய்ய இருந்தவர்கள் வரவில்லை. அதனால், தனி ஒருவராக பயணம் செய்தார்.

இந்த பயணம் குறித்து கரோன் கூறுகையில்,”பயணத்தின் போது,விமானி எந்த நாடுகளின் பறந்து கொண்டிருகிறது என்பதை சுட்டிக்காட்டினார்.மேலும்,விமானத்தின் முதல் இருக்கையில் என்னை அமர செய்து, என்னுடைய தேவைகளை அறிந்து, அதன்படி விமான ஊழியர்கள் நடந்துக்கொண்டனர்.இது ஒரு அற்புதமான பயணமாக எனக்கு இருந்தது” என்று கரோன் தெரிவித்தார்.

மேலும் படிக்க