• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விமர்சனங்கள் செய்யும் அரசியல் கட்சியினருக்கு ரஜினிகாந்த் ஜனவரியில் பதிலடி கொடுப்பார்

December 10, 2020 தண்டோரா குழு

திராவிட கட்சியினர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் திராவிட இயக்கத்தின் கடைசி காலம் என ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலமாக அக்னி ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் அய்யன் குளக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு அருணகிரி நாதர் திருக்கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் 71 வதுபிறந்த நாளை முன்னிட்டும் புதிய கட்சி துவங்குவதை முன்னிட்டு ரஜினியின் நலனுக்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் மிருத்தியஞ்ஜெய ஹோமத்தை அவரது அண்ணன் சத்யநாராயணன் 10 சிவாச்சாரியார்கள் கொண்டு ஆயுஷ் யாகம், மற்றும் அபிஷேகம் நடத்தி வழிபாடு நடத்தினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சத்தியநாராயணன்,

திராவிட கட்சியினர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தற்போது அவர்களுக்கு கடைசி காலம் ரஜினி ரசிகர் மன்றத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாநில அளவிலான பதவிகள் வழங்கப்படும். கட்சி பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் இன்னும் அனுமதி தரவில்லை. பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கட்சியில் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

விமர்சனங்கள் செய்யும் அரசியல் கட்சியினருக்கு ரஜினிகாந்த் ஜனவரியில் பதிலடி கொடுப்பார். ரஜினியின் தம்பிகள் அவருடன் இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் ரஜினியால் மாற்றத்தை கொண்டு வரமுடியும்.திமுக ,அதிமுக ஆட்சி களை மாற்றி விட்டு மக்கள் நல்லாட்சியை கொண்டு வரவேண்டும் லஞ்சம் ஒழிய வேண்டும் தமிழகத்தில் கல்வியை வளர்க்க வேண்டும் தமிழகத்தில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி உள்ளார்கள்.

ரஜினி புதிய ஆட்சியில் தொழிற் சாலைகளை அதிக அளவில் கொண்டுவருவார். படித்த இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு தேடி செல்கின்றனர் அவர்கள் மீண்டும் இந்தியாவிற்கு வருவார்கள் அந்த நிலை உருவாகும். ரஜினி ஆட்சிக்கு வந்தால் இந்த மாற்றங்கள் கண்டிப்பாக வரும் என்று கூறியவர் மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும். ரஜினியின் எண்ணங்கள் நல்ல எண்ணங்கள் வேறு எண்ணங்கள் இல்லை என்று கூறியவர். ரஜினி கட்சி ஆரம்பிப்பது நன்றாக இருக்கும் நல்லதே நடக்கும்.கட்சியில் ரஜினியின் ரசிகர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க