• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விபத்தின் போது உதவிய ‘சிறி’(SIRI) செயலி

May 16, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் வீட்டில் ஏற்பட்ட விபத்தின் போது, தன்னுடைய உயிரை காப்பாற்றிய ‘சிறி’(SIRI) என்னும் மொபைல் செயலிக்கு நன்றி தெரவித்துள்ளார்.

அமெரிக்க நாட்டின் நியூ ஹாம்ஸ்ஹையரைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் பௌச்சர். இவர் விச்கோசின் மாநிலத்தின் வில்மாட் நகரிலுள்ள அவருடைய தாயார் வசித்த வீட்டிற்க்கு சென்றுள்ளார்.

வீட்டிற்கு உள்ளே சென்ற அவர், சுவிட்சை போட்டவுடன், வீடு தீப்பற்றியது. அந்த விபத்தில் கிறிஸ்டோபரின் முகமும் கைகளும் மோசமாக எரிந்துவிட்டது. அவருடைய கைபேசியை அவர் தனது கைகளால் பயன்படுத்தி அவசர உதவிக்கு அழைப்பு விடுக்க முடியவில்லை. அதன் பிறகு ஐபோன் “சிறி(SIRI)” செயலியை பயன்படுத்தி அவசர உதவி எண் 911க்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் பெற்ற மீட்புப்பணி அதிகரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த கிறிஸ்டோபரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

தன்னுடைய சிகிச்சைக்கு பிறகு, சமையல் பணியை தொடரவும், தனது பண்ணையை கவனித்துக்கொள்ள போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆபத்து காலத்தில் உதவிய சிறி செயலிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க