• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதி கோரி மனு

July 30, 2020 தண்டோரா குழு

விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதி கோரியும், புதிய இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்குமாறும் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி இந்துக்களின் புனித பண்டிகையாக விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல இந்த வருடமும் சிறப்பான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி வழங்குமாறும் மேலும் புதிய இடங்களில் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதிக்குமாறும் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் மாவட்டத் தலைவர் காளிதாஸ் முன்னிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் காவி முத்து ராஜ்,

கொரானா காலத்தை கருதி பல்வேறு பண்டிகைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறினார். மேலும் இந்த வருடம் வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந் நிகழ்வில் கோவை மாவட்ட செயலாளர் முத்துராஜ், மாநில நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், வினோத், ராஜா கார்த்திக், சரவணன், மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க