• Download mobile app
16 Jan 2026, FridayEdition - 3628
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் மல்லையாவிற்கு செக் வைத்த உச்சநீதிமன்றம் !

May 9, 2017 தண்டோரா குழு

விசாரணைக்கு ஆஜராகததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை10-ம்தேதி விஜய் மல்லையா நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலதிபர் விஜய்மல்லையா இந்தியாவில் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் 9000 கோடி வரை கடன் வாங்கி குறிப்பிட்ட காலத்த்தில் திரும்ப செலுத்தாமல் அமலாக்கத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது. இதனால் விஜய்மல்லையா கடந்த மார்ச் மாதம் இங்கிலந்திற்கு தப்பி சென்றார்.

இந்நிலையில், மோசடி புகார் தொடர்பான வழக்கில் மல்லையா தாக்கல் செய்த ஆவணம் போலியானவை என்று வங்கி சம்மேளனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், விஜயமல்லையா தலைமறைவான குற்றவாளி என்றும் ஜூலை 10ம் தேதி அவர் நேரில் ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

விஜய்மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க