February 12, 2021 தண்டோரா குழு
விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நீக்கப்பட்ட ஜெயசீலன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் மீது அடிப்படையாக ஆதாரங்கள் இல்லாமல் அவதூறாக பேசி வருவதாகவும் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட தலைவர் பிரதீப் குமார்,
ஜெயசீலன் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தனியார் தொலைக்காட்சியில் அவதூறு பேசி வருவதாகவும் மாவட்ட நிர்வாகிகள் குறித்தும் பேசுவதாகவும் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.