• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘வாழ்க்கையில் சொல்லப்படாத பாதைகள்’ புத்தகம் கோவையில் வெளியீடு

February 12, 2021 தண்டோரா குழு

மனித உணர்வுகளோடு பின்னிபிணைந்த 75 கவிதைகள் கொண்டுள்ள வெர்ஷா சவுத்ரி எழுதிய வாழ்க்கையில் சொல்லப்படாத பாதைகள் என்ற புத்தக வெளியீட்டு விழா கோவை, ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தனியார் அரங்கில் வெளியிடப்பட்டது.

வர்ஷா சவுத்ரி, கோவை அருகே உள்ள திருப்பூரை சேர்ந்தவர். மலேசியாவில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவியாக உள்ளார். வணிக பொருளாதாரம் மற்றும் நிதி துறை கல்வி படித்து வருகிறார். புத்தக ஆசிரியர் வெர்ஷா சவுத்ரி 11 வயது முதல் புத்தகங்களை எழுதி வருகிறார். நீண்ட நாட்களாக அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பில் குறிப்பிட்ட கருத்துக்கள் இல்லாமல் பல்வேறு வகையாக இருப்பதால் இப்புத்தகத்தை அன் டோல்டு பாத் ஆப் லைப் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

வாழ்க்கையில் அழகானவற்றையும், அதற்கும் மேல் உள்ள மனிதன் தன் கண்களால் காணாத உணர்வுகளையும் அன்டோல்டு பாத்ஸ் ஆப் லைப் என்ற புத்தகத்தில் படமாக்கியுள்ளார். இந்த தலைப்பு, உத்வேகத்தையும், புத்துணர்வையும், செயல்வடிவமுள்ளதாகவும், சிந்தனையை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது.

இந்த புத்தகம், பிளிப்கார்ட், அமெசான் மற்றும் நோஷன் பிரஸ் அதிகாரப்பூர்வமான இணையத்தளங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க