• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாளையாறு சோதனை சாவடியில் கடும் சோதனைக்கு பின் வாகனங்கள் அனுமதி

May 6, 2020 தண்டோரா குழு

வாளையாறு சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனம் கடும் சோதனைக்கு பின் அனுமதி,நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் நிற்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக – கேரளா எல்லைகளில் உள்ள 13 சோதனை சாவடிகள் கடந்த 35 நாட்களாக முழுமையாக மூடப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள், மருந்து எடுத்துச் செல்லும் வாகனம் தவிர பிற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் மே 4 க்கு பிறகு ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இ – பாஸ் எடுக்கும் பொது மக்கள் சோதனைக்கு பின் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் வாளையாறு எல்லையில் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் கடுமையான சோதனைகள் நடத்தப்படுவதால் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் வரிசையாக நிற்கிறது. இதனால் நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கூட்டமாக இருப்பதை தவிர்க்க வலியுறுத்தும் நிலையில் விரைவாக வாகனங்களை சோதனை செய்து அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க