• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வால்பாறையில் 4 வயது சிறுவனை கடித்து கொன்ற சிறுத்தை

February 9, 2018 தண்டோரா குழு

வால்பாறையில் 4 வயது சிறுவனை சிறுத்தை கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை நடுமலை எஸ்டேட்டில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளியின் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று சிறுவனை அடித்து இழுத்துச் சென்றது.

இதனால் அதிர்ந்து போன அப்பகுதிவாசிகள், சிறுவனை தேடிச் சென்றபோது தேயிலைத் தோட்டத்தில்,அவனின் தலை தனியே உடல் தனியே கிடந்தது.இதனால் அப்பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில்,சிறுத்தை நடமாட்டம் குறித்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து, வனப்பகுதிக்குள்ளேயே அமர்ந்து விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து,அதிகாலையில் வால்பாறை டி.எஸ்.பி. சுப்பிரமணியன் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து,போராட்டம் கைவிடப்பட்டது.இறந்த குழந்தையின் உடல் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில், குழந்தையைக் கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தி, பொள்ளாச்சி பிரதான சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத வனத்துறையினரின் அலட்சியமே, குழந்தை பலியாக காரணம் எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் படிக்க