• Download mobile app
07 Aug 2025, ThursdayEdition - 3466
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாலிபரை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய 2 பேர் கைது

January 18, 2022 தண்டோரா குழு

கோவை சாய்பாபாகாலனி காமராஜர் வீதியை சேர்ந்த 29 வயதான தனியார் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றும் வாலிபர், சாய்பாபா காலனி போலீசில் அளித்த புகாரில், தனக்கும் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரின் மனைவிக்கும் கள்ளக்காதல் இருந்தது. இருவரும் யாருமில்லாத நேரத்தில் அடிக்கடி சந்தித்து பேசி இந்த விவரம் அவரது கணவருக்கு தெரியவந்ததால் அவர் என்னை கண்டித்தார்.

பின்னர் என்னை அவரது வீட்டுக்கு அழைத்து நிர்வாணமாக நிற்க வைத்து ஆபாசமாக வீடியோ எடுத்தார்.‌ இந்த வீடியோவை பேஸ்புக் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிடப் போகிறேன் என மிரட்டி வந்தார்.‌ இரண்டு லட்ச ரூபாய் கொடுத்தால் சமூக வலைதளங்களில் வெளியிட மாட்டேன். இல்லாவிட்டால் உனது ஆபாச வீடியோ வெளியாகும் என மிரட்டினார். அவருடன் மேலும் சிலரும் சேர்ந்து என்னை பணம் கேட்டு மிரட்டினார்கள். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பீட்டர் (30), ஜிதின் (25) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் படிக்க