• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாலாங்குளத்தில் 2 டன் பிளாஸ்டிக் கழிவுகளையும், மதுபாட்டில்களை அகற்றிய கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

May 21, 2018 தண்டோரா குழு

வாலாங்குளத்தில் 2 டன் பிளாஸ்டிக் கழிவுகளையும், மதுபாட்டில்களை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அகற்றியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள குளங்களில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒவ்வொரு வாரமும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், மதுபாட்டில்களை அகற்றுதல் போன்ற களப்பணி செய்து வருகிறது.அந்த வகையில்,கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 67 வது வார தொடர் களப்பணி நேற்று கோவை மாவட்டம் உக்கடம் அருகில் இருக்கும் வாலாங்குளத்தில் நடைபெற்றது.

இந்த களப்பணியில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு 2டன் அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகளையும், மதுபாட்டில்களையும் அகற்றினர். மேலும் இந்த குளத்தை அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதும், சாலையோரத்தில் விற்கப்படும் இளநீர் கடையினரால் தூக்கியெறியப்படும் ஸ்ட்ராக்களும் இந்த குளத்திற்கு சவாலாக உள்ளது என்றும் இந்த நிலைமை மாறும் வரை எங்களது தொடர் களப்பணி தொடரும் என்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க