• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 3,85,334 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

May 23, 2019 தண்டோரா குழு

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அபார வெற்றி பெற்றுள்ளார்.

நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக 542 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில்
பாஜக முன்னிலை பெற்று வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.

தற்போதைய நிலவரபப்டி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 343 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 93 இடங்களில் முன்னிலை. தற்போது வரை வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி அபார வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஷாலினியை 3.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ச்சி வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் படிக்க