May 23, 2019 தண்டோரா குழு
உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அபார வெற்றி பெற்றுள்ளார்.
நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக 542 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில்
பாஜக முன்னிலை பெற்று வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.
தற்போதைய நிலவரபப்டி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 343 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 93 இடங்களில் முன்னிலை. தற்போது வரை வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி அபார வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஷாலினியை 3.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ச்சி வெற்றி பெற்றுள்ளார்.