• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வான்வெளி தாக்குதலில் 40 தீவிரவாதிகள் பலி

January 20, 2017 தண்டோரா குழு

சிரியாவில் அலேப்போ மாகாணத்தின் மேற்குப் பகுதியில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் அல்-காய்தாவுடன் இணைந்த ஃபெடே அல்-ஷாம் என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 40 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

கடந்த சில வாரங்களாக அமெரிக்கா தலைமையிலான படையும் சிரியா அரசும், அதன் கூட்டாளியான ரஷியாவும் இணைந்து பயங்கரவாதிகளின் இலக்குகளைத் தாக்கி வருகின்றனர்.
எனினும் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் யார் நடத்தியது என்பது உறுதி செய்யப்படவில்லை என்று மனித உரிமை அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

ரஷியாவும் துருக்கியும் இணைந்து கடந்த டிசம்பர் 30ம் தேதி ஏற்பாடு செய்த போர்நிறுத்தத்திற்கு இந்த பயங்கரவாத அமைப்பு இணங்கவில்லை. அதையடுத்து, விமானத் தாக்குதல்களுக்கு ஆளாகி, சுமார் நூறு தீவிரவாதிகளை இழந்தது இந்த அமைப்பு.

மேலும் படிக்க