• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வானவேடிக்கைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஐ லவ் கோவை செல்பி கார்னர்

June 25, 2020 தண்டோரா குழு

உக்கடம் பெரிய குளத்தின் கரையில் அமைக்கப்பட்டுள்ள ஐ லவ் கோவை செல்பி கார்னர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு,பலூன்கள் பறக்கவிடப்பட்டு வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.

உக்கடம் பெரியகுளத்தின் கரைப்பகுதி ரூ.39.74 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது. குளத்தின் கரைப்பகுதியில் ஆங்கில எழுத்துக்களால் அமைக்கப்பட்டுள்ள ஐ லவ் கோவை என்ற செல்பி கார்னரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக கோவையில் உள்ள 9 குளங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, குளத்தின் கரைகளை மேம்படுத்தி அங்கு நடைபாதைகள், நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடங்கள், ஸ்னாக்ஸ் சாப்பிடும் இடங்கள், குழந்தைகள் விளையாட பூங்காக்கள், குளங்களின் அழகை ரசிக்க பிரத்யேக இடங்கள் மற்றும் குளத்தின் மீது நடக்க மிதவை நடைபாதைகள், ஒரு ரூபாய்க்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வாட்டர் ஏடிஎம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநகரில் உள்ள 9 குளங்களிலும் இந்த மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.377.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உக்கடம் பெரியகுளத்தின் ஒரு பகுதியில் மட்டும் ரூ.39.74 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. இதில் மேலும் ஒரு சிறப்பம்சமாக ஆங்கில எழுத்துக்களால் ஐ லவ் கோவை என்று வடிமைக்கப்பட்ட செல்பி கார்னர் உருவாக்கப்பட்டுள்ளது.இதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, ஐ லவ் கோவை வடிவத்தின் புகைப்படங்கள் வெளியாக தமிழக அளவில் டிரெண்ட் ஆனது.

இந்த சூழலில், கொரோனா ஆய்வுப் பணிகள் மற்றும் கோவையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைப்பதற்காக இன்று கோவை வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் இந்த செல்பி கார்னரை திறந்து வைத்தார்.இந்த நிலையில் குளக்கரையில் திறக்கப்பட்டுள்ள பூங்கா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு ஒளியில் காட்சி அளிக்கிறது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஐ லவ் கோவை செல்பி கார்னரில் வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டு, வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதனை இளைஞர்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் ஆர்வத்துடன் வந்து பார்த்து ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பூங்காவில் மக்கள் கூட்டம் அதிகரித்து தனிமனித இடைவெளி இல்லாத சூழல் உருவானதை கண்ட பூங்கா ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து பொதுமக்களை வெளியேற்றினர்.

மேலும் படிக்க