April 2, 2019 தண்டோரா குழு
வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனில் புதிய அப்டேட் மூலம் கைரேகை பாதுகாப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்ஆப் மொபைல் அப்ளிகேஷன்னை பயன்படுத்துகின்றனர். அதற்கு ஏற்ப அந்நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்காக தொடர்ந்து புதிய அப்டேட்டை அளித்து வருகிறது. சமீபத்தில் 200க்கு மேற்பட்ட புதிய எமோஜிகளை இந்த நிறுவனம் வெளியிட்டது. தற்போது கைரேகை சென்சார் வசதி கைரேகை சென்சார் வசதி அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதி சோதிக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய அப்டேட் மூலம் ஸ்கிரீன் லாக் என்ற புதிய வசதி சேர்க்கப்படுகிறது. அதனைத் தேர்வு செய்யும்போது பின், பேட்டன் போன்றவற்றுடன் கைரேகை சென்சார் மூலம் வாட்ஸ்ஆப்பை லாக் செய்யும் வசதிகள் அளிக்கப்படுகிறது. வாட்ஸ்ஆப்பை இந்த முறையில் லாக் செய்தாலும் போன் லாக் செய்திருக்கும்போது வரும் வாட்ஸ்ஆப் அழைப்புகளை லாக் எடுக்காமலே பேச முடியும். இதேபோல போன் லாக் செய்யப்பட்ட நிலையில் வரும் மெசேஜுக்கும் பதில் அளிக்க முடியும்.
இந்த வசதிகளை பயன்படுத்த முதலில் போன் செட்டிங்ஸில் கைரேகை (மற்றும் முகம்) ஆகியவற்றைப் லாக் செய்வதற்கான வழிகளாக பதிவு செய்ய வேண்டும். ஏதாவது பிரச்னையால் கைரேகை சென்சார் அல்லது முக அடையாளம் மூலம் லாக் நீக்கப்பட முடியாதபோது, பின்கோடு மூலம் திறக்கும் வசதி இருக்கிறது. குறிப்பாக, ஐபோன் X (iPhone X) பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக முக அடையாளத்தை வைத்து லாக் செய்யும் வசதியும் இருக்கும். சோதனையில் இருக்கும் இந்த வசதி விரைவில் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.