• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் இலவசமாக வழங்க வேண்டும் – பெங்களூர் நுகர்வோர் நீதிமன்றம்

April 25, 2017 தண்டோரா குழு

பெங்களூரில் உள்ள அனைத்து உணவு விடுதிகள், திரையரங்குகள், மற்றும் வணிக வளாகங்களில் வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் இலவசமாக வழங்க வேண்டும் என்று பெங்களூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2௦16-ம் ஆண்டு மே மாதம் 29-ம் தேதி பெங்களூரில் வசிக்கும் சுதா கட்வா(47) என்பவர் தன்னுடைய உறவினருடன் பிரபல கே.எப்.சி உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த உணவகம் குடிநீரை தரமறுத்து மினரல் பாட்டில் தண்ணீரை விலைகொடுத்து வாங்கிக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, அவர் தலைமை சுகாதார அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்பு அதே ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பெங்களூர் நகர்புற நுகர்வோர் இடர் குறைப்பு மன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கே.எப்.சி. நிறுவனம் அவருக்கு 5௦௦௦ ரூபாயை தரவேண்டும் என்றும், அதேபோல் பெங்களூரில் உள்ள அனைத்து உணவு விடுதிகள், திரையரங்குகள், மற்றும் வணிக வளாகங்களில் வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் இலவசமாக வழங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும் படிக்க