• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாடிகன் நகரில் சிகரெட் விற்பனைக்கு தடை – போப்பாண்டவர் பிரான்சிஸ்

November 10, 2017 தண்டோரா குழு

போப்பாண்டவர் பிரான்சிஸ் வாடிகன் நகரில் சிகரெட் விற்பனைக்கு தடைவித்துள்ளார்.

கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் புனித தளமாக, இத்தாலி நாட்டிலுள்ள வாடிகன் நகரம் சிறந்து விளங்குகிறது. ஒவ்வொரு நாளும் உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இந்த புனித தளத்திற்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில் இங்கு சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து
போப்பாண்டவர் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் ஆரோகியமான வாழ்க்கை வாழ, இந்த சிகரட்டை தடை ஒரு நல்ல எடுத்துகாட்டு. எனினும், மக்களுடைய ஆரோக்கியத்தை பாதிக்கும் இது போன்ற செயலுக்கு வாடிகன் நகரம் ஒருபோதும் ஆதரவு அளிக்காது என்று போப் பிரான்சிஸ் முடிவெடுத்துள்ளார்.

மேலும், வத்திக்கான் ஊழியர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட பலவற்றில் சிகரெட்டுகள் ஒன்றாகும்.தங்களுக்கு கிடைத்துள்ள சலுகைகளை பயன்படுத்தி சிகரெட் விற்பனை மூலம் பணம் சம்பாதிக்கின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், உலக சுகாதார அமைப்பை மேற்கோள் காட்டி, புகைபிடிக்கும் பழக்கத்தால்,உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் ஏழு மில்லியன் மக்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர் என்று வாடிகன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க