• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வழிப்பறி கொள்ளையனுக்கு 7 ஆண்டு சிறை

April 6, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உட்கோட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண்ணிடம் தங்கச்சங்கிலியை வழிப்பறி செய்த குற்றத்திற்காக சூலூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (30) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கு விசாரணை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று வெங்கடேஷ்க்கு 7ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.14,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மேலும் இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர் படுத்திய நீதிமன்ற காவலர் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் வெகுவாக பாராட்டினார்.

மேலும் படிக்க