• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வழிப்பறியில் ஈடுபட்ட 4 நபர்களை கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்

November 4, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் யஷ்வந்த்குமார்(23) கடந்த 01.11.2024 அன்று நாரணாபுரம் ஜே.ஜே பம்ஸ் கம்பெனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் யஷ்வந்த்குமாரை பீர் பாட்டிலைக் கொண்டு மிரட்டி அவரிடமிருந்த செல்போன்-1, பணம் ரூபாய் 1000/-, வெள்ளி பிரேஷ்லெட்-1 மற்றும் தங்க கடுக்கன் 3 கிராம் ஆகியவற்றை வழிப்பறி
செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இப்புகாரில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், உத்தரவிட்டதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்ட புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மகன் கோகுல் (27), தங்கராஜ் மகன் பூபதிராஜ் (27), பாலன் மகன் வினோத்குமார் (30) மற்றும் தர்மராஜ் மகன் சந்தோஷ் (27) ஆகியோர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.

இந்நிலையில் தனிப்படையினர் மேற்படி நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து தங்க கடுக்கன் மூன்று கிராம் மற்றும் வெள்ளி பிரேஷ்லெட்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212‌ மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

மேலும் படிக்க