• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வழக்குகள் நிலுவையில் உள்ள பட்டியலில் சென்னை உயர்நீதிமன்றம் மூன்றாவது இடம்

January 1, 2019 தண்டோரா குழு

அதிகம் நிலுவை வழக்குகள் கொண்ட நீதிமன்றங்களின் பட்டியலில் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உள்ளது என National Judicial Data Grid வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.

national judicial data grid 2018ம் ஆண்டு நீதிமன்றத்தில் நிலுவையில் அதிகம் உள்ள வழக்குகள் மற்றும் 2018ம் ஆண்டில் விசாரிக்கப்பட்டு நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மட்டும் நிலுவையில் உள்ள கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளின் எண்ணிக்கை 49,85,580 ஆக உள்ளது. இதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 3,99,233 வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புள்ளி விவரத்தில் இந்திய அளவில் உள்ள உயர் நீதிமன்றங்களில் அதிக நிலுவை வழக்குகள் கொண்ட நீதிமன்றங்களின் வரிசையில் சென்னை உயர் 3 வது இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது நீதிமன்றம் (8.01 % நிலுவை வழக்கு), இந்த பட்டியலில், முதலிடத்தில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் (14.87 % நிலுவை வழக்கு)உள்ளது, இரண்டாவதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் (14.54 % நிலுவை வழக்கு) உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெண்கள் தொடர்ந்த வழக்குகளை அதிகமாக நிலுவையில் ஹைதராபாத் உயர்நீதிமன்றம் வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க