December 25, 2019
நாளை தெரியவுள்ள வளைய சூரிய கிரகணத்தை காண கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை காலை 8 மணி முதல் 11.15 மணி வரை வளைய சூரிய கிரகணம் இந்தியா முழுவதும் தெரியும். நாளை நிகழும் வளைவடிவ சூரிய கிரகணம் கோவை, அவிநாசி,ஈரோடு,கரூர், திருப்பூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட பத்து இடங்களில் சிறப்பான முறையில் தெரியும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 75 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் காணும் வகையில் தோன்றவுள்ள இந்த சூரிய கிரகணத்தை சிறிது நேரம் கூட கண்ணால் பார்க்க கூடாது. சூரியனின் பெரும் பகுதியை சந்திரன் உள்ளடக்கியிருந்தாலும் பார்வை குறைபாட்டுக்கும் வழிவகுக்கும்.
இதற்கிடையில் பள்ளி கல்லூரி மாணவர்கள்,பொதுமக்கள் சூரிய கிரகணத்தை காணும் வகையில் பிரக்தரு சயின்ஸ் சொசைட்டி, கோவை ஏஇஎஸ் டெக்னாலஜீஸ் ஆகியவற்றோடு இணைந்து சிறப்பு கருவிகள் மூலம் சூரிய கிரகணத்தை காண ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்வில் அறிவியாளர்கள், பேராசிரியர்கள் கலந்து சூரிய கிரகணம் குறித்து விளக்கவுள்ளனர். பொதுமக்களும் இதில் கலந்து கொண்டு விளக்க மளிக்களாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.