• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வளர்ச்சி என்பதும் அனைத்து தரப்பினருக்குமானதாக இருக்க வேண்டும் – மோடி

January 9, 2019 தண்டோரா குழு

வளர்ச்சி என்பதும் அனைத்து தரப்பினருக்குமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் 10% இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது குறித்து விளக்கமளித்துள்ளார்.

விழாவில் அவர் பேசுகையில்,

வளர்ச்சி என்பது அணைத்து தரப்பினருகுமானதாக இருக்க வேண்டும். அனைவரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே 10% இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. எதிர்க்கட்சிகள் எஸ்.சி. மற்றும் எஸ்.டி.யிலிருந்து சில பகுதிகள் விலக்கப்பட வேண்டும் என்றும் உயர் சாதிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் விரும்புகின்றன. ஆனால் அவற்றிலிருந்து எதுவும் எடுக்கப்படாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன். “ஒதுக்கீடு பில் பற்றி தவறான கருத்துக்கள் பரவி வருகின்றன. நேற்று போல, நாங்கள் ராஜ்யசபாவில் மசோதாவை நிறைவேற்றுவோம் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க