June 11, 2025
தண்டோரா குழு
கோவை மாவட்ட காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 87 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 89 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 16.06.2025 ஆம் தேதி காலை 08.00 மணிக்கு கோவை அவினாசி சாலையிலுள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (GST) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.