January 24, 2019 தண்டோரா குழு
ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், அந்த இல்லம் முடக்கப்பட்ட சொத்து பட்டியலில் இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலாளிதாவிற்கு சொந்தமான வீடு சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. அவரது மறைவிற்கு பின் அந்த இல்லத்தை நினைவிடமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான கருத்து கேட்பு கூட்டங்கள் சமீபத்தில் நடத்தப்பட்டது.
இதற்கிடையே, இதற்கு தடை கேட்டு டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கின் விசாரணையின் போது, வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், அதில், ரூ 16.75 கோடி வரி பாக்கிக்காக கடந்த 2007-ம் ஆண்டிலே ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை முடக்கி விட்டோம் என்றும் அதுமட்டுமின்றி ஐதராபாத்தில் உள்ள ஒரு வீடும் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வரி பாக்கியை செலுத்திவிட்டால் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற ஆட்சேபமில்லை என்று வருமானவரித் துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நிலுவைத்தொகையை செலுத்துவதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளது.