• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மனு

December 14, 2020 தண்டோரா குழு

கோவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக தொடர் போராட்டத்தை அறிவித்து ,இரயில் மறியல் போராட்டம்சென்னையில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக,தமிழகம் முழுதும் உள்ள 12 ஆயிரத்து, 621 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு,பா.ம.க.சார்பாக மக்கள் திரள் போராட்டம் நடைபெறும் என டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.

அதன்படி கோவையில் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சி 64 வது வார்டுக்கு உட்பட்ட உப்பிலிபாளையம் கிராமத்தில் மகளிர் அணி ராஜேஸ்வரி வேலுமணி தலைமையில் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் டாஸ்மாக் பாட்டாளி மக்கள் தொழிற்சங்க மாநில துணை தலைவர் வேலுமணி உட்பட மாவட்ட நிர்வாகிகள் ஜீவா, பாலசஞ்சீவி, மருதமுத்து மற்றும் மகளிர் அணி புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கிராம நிர்வாக அலுவலரிடம் மனுவை வழங்கினர்.இதே போல கோவையின் பல்வேறு இடங்களில் பா.ம.கவினர் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க