• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: மத்திய அரசிடம் வாட்ஸ் அப் உறுதி!

July 4, 2018 தண்டோரா குழு

தவறான வதந்தி பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசிடம் வாட்ஸ் அப் உறுதியளித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக ஒருசில குறிப்பிட்ட ஜாதி பெண்கள் கற்பழிப்பு,இறைச்சிக்காக பசு மாடுகள் கடத்தல்,பிள்ளைகளை கடத்தும் கும்பல் போன்ற விவகாரங்கள் குறித்து வாட்ஸ் அப்பில் அதிக அளவில் வதந்திகள் பரவி வருகின்றன.இந்த வதந்தி எந்த அளவுக்கு உண்மை என்பதை அறியாமல் அப்பாவிகள் பலர் பொதுமக்களால் கொல்லப்படுகின்றனர்.

சாதாரணமாக யாரவது குழந்தை அருகில் சென்றாலே,அவர்களைக் குழந்தை திருடும் கும்பல் என நினைத்து,ஒரு கூட்டமே சேர்ந்து ஒருவரைத் கொடூரமாக தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இது போன்ற சம்பவங்களினால், இந்தியா முழுவதும் இதுவரை சுமார் 30 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக தெவித்துள்ளனர்.

இதற்கிடையில்,வாட்ஸ் அப்பில் சமூக பிரச்சனைகள் காரணமாக வதந்திகளை பரவிவதை அந்நிறுவனம் தடுக்க வேண்டும் என்று வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும்,இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வாட்ஸ் அப் இந்தியாவில் தடை செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளது.

இந்நிலையில்,மத்திய அரசுக்கு வாட்ஸ்அப் நிர்வாகம் விளக்கம் தந்துள்ளது.அதில்,வதந்தி பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசிடம் வாட்ஸ் அப் உறுதி கூறியுள்ளது.தவறான தகவல்கள்,வதந்திகளைத் தடுப்பது சவாலான பணியாக இருக்கிறது என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க