• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வட கொரியா குடியரசு தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நேரத்தை வீணாக்க வேண்டாம் – டிரம்ப்

October 2, 2017 தண்டோரா குழு

வட கொரியா நாட்டின் குடியரசு தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று அமெரிக்க குடியரசு தலைவர் கூறியுள்ளார்.

வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. உலக நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்தது. தங்கள் போக்கிலிருந்து மாறாமல் இருந்ததையடுத்து, ஐநா வில் புகார் அளிக்கப்பட்டது. ஐநாவும் வட கொரியாவை எச்சரித்தது. அந்த எச்சரிக்கையை மீறி வட கொரியா தனது ஏவுகணை சோதனையை செய்து வந்தது.

இதையடுத்து, அந்நாட்டின் மீது அமெரிக்கா பல தடைகளை கொண்டு வந்தது. அதை பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல், வட கொரியா தொடர்ந்து தனது ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நேற்று முன் தினம் தெரிவித்தார்.

இதையடுத்து, “சின்ன ராக்கெட் மனிதரிடம் பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். நாம் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்வோம்” என்று அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.கடந்த மாதம் ஐநா சபையில் பேசிய டிரம்ப், வட கொரியா குடியரசு தலைவரை சின்ன ராக்கெட் மனிதன் என்று குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க