• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை நீடிப்பு

December 24, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 30-ம் தேதி தொடங்கியது. ஆனால், தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. நடா புயல் காரணமாக சென்னையில் ஓரளவுக்கு மழை பெய்தது. நடா புயலால் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.

இதற்கிடையில், டிசம்பர் 10-ம் தேதி வங்கக் கடலில் வலுப்பெற்ற வர்தா புயல் 12-ம் தேதி சென்னையை நேரடியாகத் தாக்கியது. இதன் பாதிப்பு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்தமான் அருகே கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் அப்படியே நீடிக்கிறது. வலுப்பெறவும் இல்லை, வலு இழக்கவும் இல்லை.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வங்கக் கடலில் தெற்கு அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் அப்படியே நீடிக்கிறது. அதன் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும். கனமழையாக இருக்காது. லேசானது முதல் மிதமழையாக இருக்கும். இன்று சனிக்கிழமை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க