• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லியோனார்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் 450 மில்லியன் டாலருக்கு ஏலம்

November 17, 2017 தண்டோரா குழு

புகழ்பெற்ற இத்தாலிய ஓவியரான லியோனார்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் சுமார் 450 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது.

சுமார் 5௦௦ ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியரான லியோனார்டோ டா வின்சி வரைந்த ‘சால்வேட்டர் முண்டி’ என்ற இயேசுவின் ஓவியம், நியூயார்க் நகரில் கிறிஸ்டி ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது.ஏலத்தில், அந்த ஓவியம் சுமார் 2941.5 கோடி ரூபாய், அதாவது 450.3 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. அசாதரணமான விலைக்கு இந்த ஓவியம் விற்கப்பட்டதால், மிகவும் விலையுயர்ந்த கலை சேவைக்கான புதிய உலக சாதனையை இந்த ஓவியம் படைத்துள்ளது.

இந்த ஓவியம் கடந்த 2௦15ம் ஆண்டு, சுமார் 1171 கோடி ரூபாய் (179.4 மில்லியன் அமெரிக்க டாலர்)க்கு விற்கப்பட்ட ல்கோ பிகாசோவின் ‘தி விமன் ஆப் ஆல்ஜிசர்ஸ் (The Women of Algiers) ஓவியத்தின் சாதனை முறியடித்து, உலக சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க