• Download mobile app
07 Jul 2025, MondayEdition - 3435
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லண்டன் தீ விபத்தின் தொடரும் சோகம்! ஒரே அறையில் 42 கருகிய உடல்கள் கண்டெடுப்பு

June 20, 2017 தண்டோரா குழு

இங்கிலாந்து தலைநகர் லண்டன் நகரில் கடந்த ஜூன் 13ம் தேதி அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 600 பேர் இந்த குடியிருப்பில் வசித்தனர்.25 மணி நேரம் கழித்து தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டதாக அந்தநாட்டு அரசு அறிவித்திருந்தது. இதற்கிடையில் தீ அணைக்கப்பட்ட பின்னும் மீட்பு பணிகள் ஒருவாரம் கடந்தும் இன்னமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தீயணைப்புபடை வீரர் ஒருவர் தேடுதல் பணியில் இருக்கும்போது ‘ஒரே அறையில் மட்டும் 42 கருகிய உடல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இறந்தவர்களின் உடலை மீட்பதற்கான முயற்சியில் லண்டன் அரசு இறங்கியுள்ளது.

ஏற்கனவே இந்த தீ விபத்து சம்பவம் லண்டன் மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில் ஒரே அறையில் 42 உடல்கள் கருகிய நிலையில் எடுக்கப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க