• Download mobile app
01 Dec 2025, MondayEdition - 3582
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லண்டன் உணவு விடுதியில் மனித இறைச்சி பரிமாறப்பட்டதா?

May 19, 2017 தண்டோரா குழு

லண்டனிலுள்ள இந்திய உணவு விடுதியில் மனித இறைச்சி பரிமாறப்படுவதாக பேஸ்புக்கில் வெளிவந்த தவறான செய்தியால் அந்த விடுதி மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லண்டனில் தென் கிழக்கு பகுதியில் “கரி ட்விஸ்ட்” என்னும் இந்திய உணவு விடுதியை ஷின்ரா பேகம் என்பவர் நடத்தி வருகிறார். அந்த உணவகத்தில் மனித இறைச்சி பரிமாறப்படுவதாக இணைய தளமான பேஸ்புக்கில் வெளிவந்த செய்தியால் தனது விடுதியை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதுக்குறித்து அந்த விடுதியின் உரிமையாளர் ஷின்ரா பேகம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“எங்கள் உணவு விடுதியில் மனித இறைச்சி பரிமாறப்படுவதாக வந்த செய்தியை பலர் உண்மை என்று நம்பிவிட்டனர். உங்கள் விடுதியை திறந்தால், அதை உடைத்து நொறுக்கி விடுவோம் என்று ஒருவர் தொலைபேசி மூலம் மிரட்டினார். இதை அறிந்த மற்றொருவர் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.

இந்த செய்தியால் எங்கள் வணிகம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு தைரியமிருந்தால் எங்களுக்கு மனித இறைச்சி பரிமாறுவீர்கள்? என்று மக்கள் தொலைபேசி மூலம் திட்டுகிறார்கள். இந்த விடுதியை கடந்த 6௦ ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். யாரோ வெளியிட்ட இந்த தவறான செய்தியால் இதை மூட வேண்டிய நிலை.

இந்த செய்தி வெளியானது முதல், வாடிக்கையாளர்கள் வரவு குறைந்து விட்டது. ஊழியர்களும் தங்களுடைய பணியின் நேரத்தை குறைது கொண்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க