• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

February 25, 2019 தண்டோரா குழு

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும், சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மின்வாரியத்தில் உதவி பொறியாளர் நியமனத்திற்கான எழுத்து தேர்வுக்கான கேள்வித்தாள் லீக்கானது. இது தொடர்பாக மதுரை சூர்யாநகரை சேர்ந்த பழனிபாரதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கோபமுற்றதுடன், காட்டமான கருத்துக்களையும் தெரிவித்தனர்.

இவ்வழக்கில் நீதிபதிகள் கூறுகையில்,

” லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். லஞ்சம் வாங்குவோர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதற்கென கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் லஞ்சம் வாங்குவோர் சொத்துக்களை முடக்க வேண்டும். கடுமையான சட்டம் வந்தால்தான் லஞ்சம் வாங்குவது இயல்பான விஷயம் என்பது மாறும். லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும். அப்போது தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும் என காட்டமாக கூறியுள்ளனர்.

இதையடுத்து, இவ்வழக்கை நீதிபதிகள் மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க