• Download mobile app
13 May 2025, TuesdayEdition - 3380
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூ25 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேசன் கடை – பி.ஆர்.நடராஜன் எம்பி., திறந்து வைத்தார்

February 16, 2023 தண்டோரா குழு

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய ரேசன் கடை கட்டிடத்திற்கு ரூ25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கட்டுமான பணிகள் நிறைவுற்று இதன் திறப்பு விழா வியாழனன்று நடைபெற்றது. இதனை பி.ஆர்.நடராஜன் எம்பி., திறந்துவைத்தார்.

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணபதி காமராஜபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் புதிய ரேசன் கடைக்கான கட்டிடம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று, பி.ஆர்.நடராஜன் எம்பி., புதிய ரேசன் கடைக்கான கட்டிடம் கட்ட ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், ரேசன் கடைக்கான புதிய கட்டிடத்தை வியாழனன்று மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையாளர் மகேஸ் கண்ணன், உதவி பொறியாளர் சரவணக்குமார், கணபதி 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வைரமுருகன்,12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வெ.இராமமூர்த்தி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.முருகேசன், வடக்கு நகரச்செயலாளர் சுந்தரம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி, திமுக பிரமுகர்களும், பொதுமக்களும் திரளானோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க