• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் 4 வகுப்பறை கட்டிடங்கள், தார்சாலை அமைக்கும் பணிகள்

November 29, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 95வது வார்டுக்குட்பட்ட என்.பி இட்டேரி ஒன்பதாவது வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.65.50 லட்சம் மதீப்பீட்டில் புதிதாக நான்கு வகுப்பறைகள் கட்டுமான பணிகள், 85வது வார்டுக்குட்பட்ட பகுதியில் குறிச்சி மைதானம் முதல் உழவர் சந்தை வரை ரூ.50.70 லட்சம் மதிப்பீட்டில் 650 மீட்டர் தொலைவிற்கு புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோரால் பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து வசந்தம் நகர் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில்புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் தெற்கு மண்டல தலைவர் தலைட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், உதவி கமிஷனர்அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க