December 28, 2018 தண்டோரா குழு
கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவில் தூய அன்னை சாரதா தேவியார் 166 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
காலை மங்கள ஆரத்தியுடன் தொடங்கிய இந்த விழாவில் வித்யாலய மாணவர்களின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து வித்யாலய நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டனந்தர் விழாவில் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். அதனை தொடர்ந்து பல்வேறு நிறுவங்களின் மாணவர்கள் பங்குபெற்ற பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து கோவிலில் விசேஷ ஹோமம் நடைபெற்றது. இதில் வித்யாலய நிறுவனங்களின் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். அனைவரும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை பெண்கள் பங்கு பெற்ற சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபெற்றனர் . இதற்கான ஏற்பாடுகள் வித்யாலய நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டனந்தர் தலைமையில் செய்யப்பட்டது.