• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா வளாகத்தில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் திறப்பு

May 28, 2021 தண்டோரா குழு

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட் கேர் மையத்தை அமைச்சர்கள் சக்ரபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில் நோயாளிகளுக்கு தனிமை மையங்கள் மற்றும் படுக்கை வசதி கிடைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நோயாளிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா நிறுவனத்தின் ஜூவல் ஒன் சார்பாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலாயா வளாகத்தில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது. இதனை மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இது குறித்து, எமரால்டுஜூவல் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் கூறுகையில்,

இம்மையத்தில் 290 படுக்கைகளும் 10 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் கூடிய இந்த மையத்தில் அனுமதிக்கபடும்,கொரோனா நோயாளிகளுக்கு சத்துள்ள உணவு,அவர்களது மன நலம் பேணுதல்,அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளுதல் ஆகிய அம்சங்களில் இம்மையம் தனிப்பட்ட சுவனம் செலுத்த உள்ளதாகவும் மேலும் இங்கு படுக்கை வசதி , ஃபேன், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முதலான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மையத்தில் கூடுதலாக நவீன வை ஃபை , DTH , புரொஜக்டர் வசதிகள் , செல்போன் சார்ஜிங்பாயிண்ட்ஸ் , விளையாட்டுகள் முதலான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க