• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராகுல் காந்தி பற்றி அவதூறாக கேலிசித்திரம் வெளியிட்டதாக பிரபல வார இதழை எரித்து போராட்டம்

July 11, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டம் டவுன்ஹால் மணிகூண்டு பகுதியில் கோவை மாநகர காங்கிரஸ் கட்சியின் சார்பாக மயூரா ஜெயக்குமார் தலைமையில் 10 மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியை பிரபல வார இதழ் (குங்குமம்) அவதூறு பரப்பும் விதத்தில் கேலிச்சித்திரம் வரைந்தும், பத்திரிக்கை தர்மத்தை மீறி கேலி சித்தரத்தை வெளியிட்ட வார இதழ் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டனத்தை பதிவு செய்யும் விதத்தில் வாரப்பத்திரிக்கை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்தி கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூடியதாகவும் பொது இடங்களில் போராட்டம் நடத்தியதற்காக பத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் படிக்க