• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராகுல்காந்தி பிரதமராவதற்கு திறமையையும் பொறுமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் – சி.பி.ராதாகிருஷ்ணன்

July 23, 2018 தண்டோரா குழு

ராகுல்காந்தி இன்னும் பிரதமர் ஆவதற்கு தன்னுடைய தனிப்பட்ட திறமையையும்,பொறுமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“தற்போது வருமானத் துறையினர் தனக்கு வருகின்ற தகவல்களின் அடிப்படையிலேயே சோதனை செய்வதாகவும்,வருமான வரித்துறையை இயக்குகின்ற இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி இல்லை என கூறினார்.தமிழக அரசு,பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்தும் பேசி உள்ளனர்,எனவே அவர்கள் ஒன்றும் பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை.ஸ்டாலினின் ஒவ்வொரு பேச்சும் பொதுமக்களுக்கு ஏமாற்றம் தரும் வகையிலேயே அமைந்து தற்போது அமைந்து உள்ளது.

கமலஹாசன் ஒரு நடிகராக மட்டுமே மக்களால் அறியப்படுவதாகவும்,அரசியல் தலைவராக அறிய இன்னும் கால ஆவகாசம் ஆகும்.கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்தும் நீர்நிலைகள் நிரம்பவில்லை என கூறிய அவர்,மழைத் தண்ணீர் வீணாகி கேரளாவிற்கு செல்வதாகவும்,எனவே தமிழக அரசு நீரை சேமிப்பது குறித்து அக்கறையுடன் செயல்பட வேண்டும்”.எனக் கூறினார்.

மேலும் படிக்க