• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஹீம் சிங்கிற்கு தீர்ப்பளித்த நீதிபதிக்கு பலத்த பாதுகாப்பு

August 26, 2017 தண்டோரா குழு

குர்மித் ராம் ரஹீம் சிங் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த நீதிபதிக்கு பலத்த பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, ஹரியானா அரசை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சட்டப்பட்ட ஆன்மீகவாதி குர்மீத் ராம் ரஹீமை பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜக்தீப் சிங் குற்றவாளி என தீர்ப்பளித்தார்.இதனால், பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 32 பேர் உயிரிழந்த நிலையில் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், தீர்ப்பளித்த நீதிபதிக்கு மிரட்டல்கள் வருவதால், அவருக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உள்துறை, ஹரியானா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, நீதிபதி ஜக்தீப் சிங்குக்கு மத்தியப்படை பாதுகாப்பு என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அது சி.ஆர்.பி.எஃப். வீரர்களால் மேற்கொள்ளப்படுமா? அல்லது சி.ஐ.பி.எஃப் வீரரர்களால் மேற்கொள்ளப்படுமா? என்பதை உளவுத்துறை வழங்கும் தகவல்களைக் கொண்டு முடிவெடுக்க இருப்பதாக மத்திய உள்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க