• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரயில் நிலையம் அருகே உள்ள கடைகளில் ஆய்வு – ரூ.6 ஆயிரம் அபராதம் விதிப்பு

May 10, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று முதல் வரும் 24ம் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கபட்டுள்ளது. அத்தியாவசிய தேவையான மளிகை கடை, காய்கறி கடைகள் மற்றும் டீக்கடைகள் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் மக்கள், வியாபாரிகள் அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற அறிவுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ் தலைமையில் எஸ்.ஒ. ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அரவிந்த் கோவை ரயில் நிலையம் முன்பு உள்ள கடைகளில் கொரோனா தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கடைகளில் முகக்கவசம் அணியாமலும் ,சமூக இடைவெளியை பின் பற்றாமலும் மற்றும் கடையில் அமர்ந்து உணவருந்த அனுமதித்த 8 கடைகளுக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் கடைகள் அரசு விதிமுறைகளை பின்பற்றுமாறும் அதிகாரிகள் வியாபாரிகளிடம் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க