• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரயில் தவறான பாதையில் சென்றதால் ரயில்நிலைய அதிகாரி பணி இடை நீக்கம்

September 1, 2017 தண்டோரா குழு

உ.பியில் ரயிலை தவறான பாதையில் கொடியசைத்து திருப்பிவிட்டதிற்காக பிப்னா ரயில்நிலைய அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.

உத்தர பிரதேஷ் மாநிலத்தில், பிப்னா ரயில்நிலையத்திலிருந்து காசிபூர் நகருக்கு செல்ல வேண்டிய சப்ரா வாரணாசி இண்டர்சிட்டி ரயில் மாவ் நகருக்கு செல்லும் பாதையில் சென்றுவிட்டது.அதன் பின்னர் ரயில் தவறான பாதையில் செல்வதை உணர்ந்த ரயில் பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தனர். உடனே அவர் பிப்னா ரயில்நிலைய அதிகாரிக்கு தகவல் தந்தார்.

தவறை அறிந்த அவர், மீண்டும் அந்த ரயில் பிப்னா ரயில்நிலையத்திற்கு திரும்பி வர செய்தார். சப்ரா வாரணாசி இண்டர்சிட்டி ரயில் தவறான பாதையில் சென்றதற்காக, பிப்னா ரயில்நிலைய அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.

சுமார் 25 நிமிடம் தாமதத்திற்கு பிறகு, சரியான பாதையில் ரயில் சென்றது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க