• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘ரயில் கனெக்ட் ஆப்’ மூலம் 50 வினாடிகளில் தக்கல் ரயில் டிக்கெட்

April 17, 2017 தண்டோரா குழு

தக்கல் முறையில், 50 வினாடிகளில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் புதிய வசதியை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகப்படுத்தி உள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி,யில் இணைய தளம் மூலமாக கூடுதல் கட்டணத்துடன் ஒரு நாள் முன்னதாக, தக்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை அமலில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி 7 ம் தேதி, “ரயில் கனெக்ட் ஆப்” என்ற புதிய ஆப் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய ஆப் வசதியை ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டும், ‘பேடிம்’ பணம் செலுத்தும் வசதி மூலம், தக்கல் ரயில் டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்ய முடியும்.

முதலில், ஏ.சி., பெட்டிக்கு தான், இந்த முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று இருந்த நிலையில் கடந்த ஏப் 9ம் தேதி முதல், படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகளுக்கும் இதன் மூலம் முன்பதிவு செய்யலாம் என்று ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.

இந்த வசதி மூலமாக இனி, 50 வினாடிகளில் தக்கல் ரயில் டிக்கெட் முன்பதிவை செய்யலாம் என்று ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க