• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினி சத்யராஜுக்காக குரல் கொடுக்காதது ஏன்?.. அமைச்சர் வேலுமணி கேள்வி

May 20, 2017 தண்டோரா குழு

காவிரி பிரச்சனை குறித்து பேசியதற்காக சத்யராஜ் நடித்த படத்தை வெளியிடாமல் தடுத்த போது அவருக்காக ரஜினிகாந்த் குரல் கொடுக்காதது ஏன் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் சிஸ்டம் கெட்டுப் போச்சு பேச்சு எனக் கூறியது பலவிதமான விவாதங்களையும், சலசலப்புகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது,”காவிரிப் பிரச்சினையின்போது அனைவருமே மாநில நலனுக்காக குரல் கொடுத்தோம். அரசும் கொடுத்தது, கட்சிகளும் கொடுத்தன.அதேபோல நடிகர் சத்யராஜும் குரல் கொடுத்தார். அந்த விவகாரத்தில் அனைவருமே தமிழகத்தின் உரிமைக்காகத்தான் குரல் கொடுத்தோம். கர்நாடகத்தைக் கண்டித்தோம். அதேபோலத்தான் சத்யராஜும் குரல் கொடுத்திருந்தார். ஆனால் அவர் நடித்த பாகுபலி படம் வெளியாக விடாமல் கர்நாடகத்தில் தடுத்தனர்.

கர்நாடகத்தில் சத்யராஜுக்காக போராட்டம் நடத்தி அவரை கண்டித்தனர். அப்போது சத்யராஜுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுத்திருக்க வேண்டும் ஏன் கொடுக்கவில்லை என்றார்.

மேலும், தமிழகத்தில் வட மாநிலங்களை விட சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது. இங்கு சிஸ்டம் எல்லாம் கெடவில்லை. நன்றாகவே உள்ளது. இதனால்தான் பிற மாநிலத்தவரும் கூட இங்கு வர ஆசைப்படுகின்றனர்” என்று கூறினார்.

மேலும் படிக்க