• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“ரஜினிகாந்த் ஒரு வியாபாரி” – செல்லூர் ராஜூ

May 22, 2017 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்த் ஒரு வியாபாரி இன்றைக்கு ஒன்று பேசுவார், நாளைக்கு ஒன்று பேசுவார் என தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் சில கருத்துகளை வெளியிட்டார். அது அவர் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதனிடையே ரஜினிகாந்த் ஒரு வியாபாரி என அமைச்சர் செல்லூர் ராஜு விமர்ச்சித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

தமிழகத்தில் எம்.ஜி.ஆர்-ருக்குப் பிறகு கட்சி தொடங்கியவர்கள் கதி என்னாச்சு என்பதை அனைவரும் அறிவார்கள்.

ரஜினி ரசிகர்கள் மத்தியில் கூறியதை பற்றியெல்லாம் கவலைக்கொள்ளத் தேவையில்லை. தமிழகத்தில் சிஸ்டம் எதுவும் ரஜினி சொன்னது போல் கெட்டுப்போகவில்லை.

நடிகர் ரஜினிகாந்த் ஒரு வியாபாரி, இன்றைக்கு ஒன்று பேசுவார், நாளைக்கு ஒன்று பேசுவார். தற்போது நடிகர்கள் பின்னால் போவதை தமிழக மக்கள் தவிர்த்துவிட்டனர்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க