May 11, 2019 தண்டோரா குழு
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தாமதமாவது நல்லது தான் என அவரது அண்ணன் சத்திய நாராயணன் கூறியுள்ளார்.
திருச்சி கேகே நகரில் ரஜினியின் பெற்றோருக்கு அவரது ரசிகர்கள் மணிமண்டபம் கட்டியுள்ளனர். அங்கு நடைபெற்ற பூஜைகளில் சிறப்பு விருந்தினராக ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணா கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து மே 23-க்கு மேல் அறிவிப்பார். நல்ல முடிவை ரஜினி அறிவிப்பார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தாமதமாவது நல்லது தான். விரைவில் அவர் வருவார். ரஜினியின் பெற்றோருக்காக ரசிகர்கள் கட்டிய நினைவு மண்டபத்தை காண அவர் வருவார் என கூறினார்.